தேடி வந்த விருதுகள்...வழங்கிய வள்ளல்கள்
நான் கேட்கவில்லை....எதிர்பார்க்கவுமில்லை. தேமேன்னு எனக்குத்தெரிந்ததை, பார்த்ததை, ரசித்ததை, கேட்டதை....இன்னும் பலவகையான தை..தை..தைகளை உங்களோடு ஆர்வத்தோடு, தேங்கிக்கிடந்த அணை நிரம்பி மதகை திறந்து விட்டாற்போல் எனக்கும் ஒரு வடிகாலாக வந்து வாய்த்தது, 'பதிவர் உலகம்!' கப்புன்னு பிடிச்சிக்கிட்டேன். விறுவிறுவென்று மேலேறியிருக்கிறேன் போலும். அடுத்ததடுத்து கைகளில் விழுந்தன விருதுகள். என்னதான் நமக்குள்ள்ளே நாமே நம் முதுகை தட்டிக் கொடுப்பது போலென்றாலும் 'விருது' என்றாலே ஒரு விருவிருப்பு இருக்கில்ல? அந்த மகிழ்ச்சியோடு எனக்கு இவற்றை வழங்கிய சகோதரிகள், திருமதி செல்விசங்கர், என்னை பட்டாம்பூச்சியாக சிறகடிக்க வைத்தவர், அடுத்து திருமதி கோமா, சுவாரஸ்யமான பதிவர் என்ற முத்திரையை என் மேல் பதித்திருக்கிறார்.
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!!!செல்விசங்கர் வழங்கிய பட்டாம்பூச்சி விருது!!!
கோமா முத்திரையிட்ட பதக்கம்!!!
நிறைய பதிவர்களின் பதிவுகளில் இந்த விருதுகளைப் பார்த்திருக்கிறேன். இப்ப நான் யாரைன்னு தேடுவது?
காற்று
ராஜா/KVR
வெடிவால்
அ.மு.செய்யது
இந்நால்வருக்கும் இந்த இரண்டு விருதுகளை வாரி வாரி வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.



